பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பொற்கோவில்!

24203
Penugonda_Aryavysya_Vasavi_Feature.png

பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. அதே பெனுகொண்டவில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 முதல் 15 ஆம் தேதி வரை நம் அன்னைக்காக கட்டப்பட்டுள்ள பொற்கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் மற்றும் வாசவி அன்னையின் சிலை பிரதிஷ்டை என இருபெரு விழா நடந்தது என்பது அனைத்து ஆர்ய வைஸ்ய மக்களும் அறிந்ததே.

காண கண் கோடி வேண்டும்:

Penugonda_Aryavysya_Vasavi_Statue

ஐந்து அல்ல, பத்து அல்ல, கடந்த முப்பது ஆண்டுகளாக கோடிக்கணக்கான ஆர்ய வைஸ்யர்களின் உழைப்பாலும் நன்கொடையினாலும் இப்புனித சேத்திரம் கட்டப்பட்டுள்ளது.

காஸ்மிக் கதிர்களை இழுக்கும் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ள 90 அடி உயரமான வாசவி அன்னையின் சிலையே இவ்வுலகத்தின் மிக உயர்ந்த பஞ்சலோக சிலையாகும். 40 டன் எடை கொண்ட இந்த பிரமாண்ட சிலை 185 அடி உயர பொற்கோவிலுற்குள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இப்பொற்கோவிலில் மொத்தம் 102 தூண்கள் உள்ளன. இது 102  ஆர்ய வைஸ்ய கோத்திரங்களை குறிக்கிறது, இத்தூண்களில் அன்னை வாசவி தேவியுடன் அக்னி குண்டத்தில் ஏறிய கோத்திர முனிவர்களின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கோவிலின் கோபுரம் இந்தியாவின் Top 5 உயர்ந்த கோபுரங்களை கொண்ட கோவில்களுள் ஒன்றாக இணைந்துள்ளது. இக்கோவிலின் கர்பகிரகமே உலகத்தின் மிகப்பெரிய கர்ப்பகிரகம் என்ற பெருமையும் பெறுகிறது.

ஆர்ய வைஸ்யர்களின் காசியாகிய பெனுகொண்டவிற்கு குடும்பத்துடன் சென்று அன்னையின் அருளை பெறுங்கள். ஜெய் வாசவி!

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Want to post your article on Vysdom? Click here and get in touch with Vysdom team!

Image Credits: Vasavi Santhi Dham

10 COMMENTS