வைஸ்ய சமூகத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் பெற்றோர் நினைவாகச் சிறுகதைப் போட்டி!

720

தமிழ் இலக்கிய உலகில் குற்றவியல் மற்றும் திரில்லர் நாவல்களின் மன்னனாகக் கொண்டாடப்படும் நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த பிரபல பட்டுக்கோட்டை பிரபாகர், தன் பெற்றோரான திரு. வி. ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி. ஆர். சந்திரா ஆகியோரின் நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான திரைக்கதை ஆசிரியரான பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் நடத்தவுள்ள இந்தச் சிறுகதைப் போட்டி, புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

போட்டியின் விவரங்கள்:

• போட்டியில் பங்கேற்பவர்கள் 1000 வார்த்தைகளுக்குள் சிறுகதைகளை எழுத வேண்டும்.
• எந்த வகை கதையையும் (genre) தேர்வு செய்யலாம்.
• ஒவ்வொருவரும் இரண்டு வேறுபட்ட கதைகளை அனுப்பலாம்.
• கதைகளை chandra.radha.pkt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பரிசு விவரங்கள்:

• 🏆 முதல் பரிசு: ₹10,000

🥈 இரண்டாம் பரிசு: ₹5,000

🥉 மூன்றாம் பரிசு: ₹2,000

🏅 ஆறுதல் பரிசு: ₹1,000 (10 பேருக்கு)

வெற்றி பெறும் அனைத்து கதைகளும் ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டுக்கோட்டை பிரபாகரின் இந்த முயற்சியானது, புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதோடு, தமிழ் இலக்கியத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழுத்தாற்றல் கொண்ட அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group