ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs – Episode 4

3109

நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கே.சி. குப்தாவிற்கு ஒரு புதிய எண்ணம் தோன்றியது என்று போன பதிவில் பார்த்தோம்.

Click here to Read the Previous Episode of ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs

அதாவது வைசியர்களில் உயர்பதவியில் இருக்கும் கலெக்டர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணம் குப்தாவிற்கு தோன்றியது.

அதாவது சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் தாங்கள் எவ்வாறு அவ்வாறு உயர முடிந்தது என்பதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு அதனால் மற்ற வைஸ்யர்களும் பயன் பெறவேண்டும் என்று அவர் நினைத்தார். அதற்காக ஒரு சேவைச் சங்கம் ஆரம்பித்தால் என்ன என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது.

சரித்திரத்தில் திருப்புமுனையாக 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அகில இந்திய வாசவி சங்கம் பதினோரு உறுப்பினர்களுடன் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. பிறகு பத்து வருடங்கள் கழித்து ஏழை மக்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவினால் என்ன என்கிற உயரிய எண்ணம் அவருக்கு மீண்டும் தோன்றவே போலியோ சொட்டு மருந்து போடுதல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல், ஆதரவற்ற பெண்களுக்கு தையல் எந்திரம் மற்றும் கிரைண்டர் வாங்கித் தந்து அவர்களின் வறுமையைப் போக்குதல் போன்ற சேவைத் திட்டங்களை நம்முடைய வாசவி கிளப்பின் தந்தை கே.சி. குப்தா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆந்திராவில் நம் சமூகத்தை பிற சமூகத்தார் பெருமையுடன் பார்க்கத் தொடங்கினர். பிறகு ஆந்திராவில் பிற இடங்களிலும் வாசவி சங்கம் ஆரம்பித்தால் என்ன? என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றவே ஆந்திராவில் உள்ள வாராங்கலில் (Warangal) முதல் வாசவி கிளப்பின் கிளைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு 1976 இல் இருந்து 1992 வரை ஆறு புதியச் சங்கங்கள் தோன்றின.

இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, உகாண்டா போன்ற பல வெளிநாடுகளில் வசித்து வந்த வைசியர்களும் வாசவிச் சங்கத்தை பெருமையுடன் ஆரம்பிக்க 2007 ஆம் ஆண்டு அகில இந்திய வாசவி சங்கத்தின் பெயர் அகில உலக வாசவிச் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

பிறகு மீண்டும் 2008 ஆம் ஆண்டு வாசவி கிளப் இன்டர்நேஷனல் என்று ஹைதராபாத்தில் சங்கம் பதிவு செய்யப்பட்டது. பிறகு பெண்களுக்காக வாசவி கிளப் வனிதா தோன்றி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தியாவில் தோன்றி வெளிநாடுகளில் பரவிய ஒரே சங்கம் இது எனும் மாபெரும் சாதனையை செய்தது நம் வாசவி கிளப்.

நம் தமிழகத்தில் குறிப்பாக சங்கத்தின் கவர்னர்களாக விளங்கிய கோயமுத்தூர் திரு. பி.வி. சேகர் அவர்கள், ஈரோடு சௌபாக்கியா திரு. ஆதிகேசவன் அவர்கள், விருதாச்சலம் திரு. ராமதாஸ் அவர்கள், பொள்ளாச்சி திரு. பலராமன் அவர்கள், மதுரை திரு. ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் அதற்கு பின் வந்த அத்தனை கவர்னர்களின் அயராத முயற்சியால் இன்று சங்கம் பெரும் வளர்ச்சியுற்று மூன்று மாவட்டமாக வளர காரணமாக இருந்திருக்கிறார்கள்.

மேலும் 1961ம் ஆண்டு குப்தா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வாசவி கிளப் இன்று சிறப்பாக செயல்படுகின்ற ஒரு சர்வதேச சங்கமாக மாறி பெரிய ஆலமரத்தைப் போல் சேவை எனும் நிழலைப் பரப்பி சமத்துவம் எனும் பிராண வாயுவை வெளியிட்டு அடையாறு ஆலமரத்தைப் போல் இன்னமும் பெரியதாக வளர்ந்து கொண்டே வருகிறது.

அந்த ஆலமரத்தின் வேராக திகழ்ந்து நம் கண்ணுக்குத் தெரியாமல் நம்மை ஆசிர்வதிக்கும் தெய்வமாக இன்றும் திகழ்பவர்தான் வைஸ்ய ஸ்ரீ என்றும் வைஸ்யபந்து என்றும் புகழப்பட்ட கல்வகுண்டல சந்திரசேன குப்தா அவர்கள்.

இவர் 2001 ஆம் ஆண்டு 25 ஆம் தேதி அக்டோபர் மாதம் இந்த உலகை விட்டு மறைந்தார்.

அவர் மறைந்தாலும் அவரின் புகழ் சரித்திரத்தில் மட்டுமல்ல நம் மனதிலும் அழியா இடம் பெற்றுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த வரலாற்றுத் தொடர் இதனுடன் முற்றும். ஆனால் வாசவி கிளப்பின் சேவைகள் சூரியன் சந்திரன் இருக்கும் வரை தொடரும்.

பண்ருட்டி சொ.முத்துக்குமார்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

🎧 Subscribe Ekasvara to hear Powerful Mantra Series for a Powerful Life: www.youtube.com/channel/UCqzrwXCnJKnmMIwu2sQfV3Q

👩‍🍳 Click and View the Gallery of 500+ Aryavysya Traditional Recipes. Let’s bring back Aryavysya Traditional Foods in our daily life, much stronger and bigger!