பொள்ளாச்சியில் ஸ்ரீரங்கம் | ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

3846

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொர்க்க வாசலின் நுழைவாயிலை போலவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக நமது பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட நுழைவாயிலினை அமைத்து, ஸ்ரீ ரங்கநாத பெருமாளை சயன திவ்ய திருக்கோலத்தில் திவ்ய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர் நம் பொள்ளாச்சி வாழ் ஆர்ய வைஸ்ய பெருமக்கள்.

சொர்க்க வாசல் ஜனவரி 6 ஆம் தேதி, திங்கள் கிழமையன்று அதிகாலை 4:45 மணி முதல் நாள் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படும்.

மேலும், திருமதி. இந்திரா ஜெயசந்திரன் குழுவினரின் சம்பூர்ண நாராயணீயம் பாராயணம் காலை 7:00 மணிமுதல் தொடர்ந்து மாலை 6:00 மணிவரை நடக்க இருக்கிறது.

திருமாலின் இருப்பிடத்தில் இருக்கும் வைகுண்ட கதவுகள் திறக்கப்படும் இந்த வைகுண்ட ஏகாதசி திருநாளில், தங்கள் குடும்பத்தினருடன் ஆலயத்திற்கு சென்று ஸ்ரீ ரங்கநாதரின் அருளை பெறுங்கள்.

பொள்ளாச்சி ஆர்ய வைஸ்ய பெருமக்களுக்கும், விழா குழுவினருக்கும் VYSDOM.in குடும்பத்தினரின் வாழ்த்துக்கள்!

தகவலுக்கு நன்றி – திரு. பிரபு, பொள்ளாச்சி

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group