45 ஆண்டுகளாக இசையை கற்றுக்கொடுக்கும் திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன்

3288
Vysdom_Rajalakshmi

கடந்த 45 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன் இசைத்துறையில் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். நம் வைசிய குல மக்களுக்கு பாட்டும் வீணையும் கற்றுத்தந்து இசையை வளர்த்து கொண்டிருக்கிறார்கள்.

Vysdom_Aryavysya

40 வருடங்களுக்கு முன்பாகவே இசையில் வீணை வாசிப்பில் Gold Medalist என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதி, இசையமைத்து, பாடி, வீணை வாசித்து, இப்படி பல்வேறு துறைகளில் திறமை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் தான் பெற்ற திறமைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள். இன்றும்கூட ராஜஸ்ரீ வாசவி கான சபா என்ற பெயரில் இசை வகுப்புகள் எடுத்து சொல்லிக் கொடுத்து வருகின்றார்கள்.

இவர்கள் வைசிய சாதனையாளர் விருது பெற்றவர் ஆவார்கள் இவர்களைப் போல இன்னும் பல வைசிய திறமையாளர்களை சாதனையாளர்களை நாம் தொடர்ந்து காண்போம் இணைந்து வாழ்த்துவோம் ஜெய் வாசவி!